Thursday, February 2, 2023

இன்று சின்னக்காவின் 25வது நினைவு தினம்

அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 25வது நினைவு தினம்

        அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி

இன்று அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 25வது நினைவு தினமாகும். 

சின்னக்காவின் 'அம்பிகை இல்லம்' பல ஆண்டுகளாக மாணவர்கள் வசிக்கும் இடமாகவும், காலத்துக்கு காலம் பாலர் பள்ளியாகவும், தையல் பள்ளியாகவும், ரியூசன் சென்ரர் ஆகவும் இயங்குவதற்கு உதவியதோடு உறுதுணையாகவும் செயற்பட்டார்.

அம்பிகை இல்லத்தில் வசித்த மாணவர்கள் இடையூறற்ற ஆதரவான சூழலில் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது, அதே சமயம் பாலர் பள்ளி இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு கல்வியறிவை விளையாட்டோடு வளர்த்து ஊக்கமளிக்கும் சூழலை வழங்கியது. தையல் பள்ளி இளைஞர்களுக்கு மதிப்புமிக்க திறன்களைக் கற்பித்தது, மேலும் கல்வி மையம் மாணவ சமூகத்திற்கு பரந்த அளவிலான வகுப்புகள் மற்றும் பட்டறைகளை வழங்கியதன் மூலம் அவர்களின் திறமைகளை மேம்படுத்த, செப்பனிட உதவியது. 

 'அம்பிகை இல்லம்' வெறுமனே கல்வி கற்கும் இடமாக மட்டுமல்லாமல் நட்பும், நகைச்சுவையும், உறுதுணையும் நிறைந்த சூழலில் மாணவர்கள் சுதந்திரமாக விளையாட்டோடு விளையாட்டாக தங்கள் திறன்களை வளர்க்குமிடமாக இருப்பதற்கு மிகவும் ஆதரவாக இருந்தார். ஒற்றை வரியில் சொல்லின் "அம்பிகை இல்லம் வந்தோரில் பாலர்கள், மாணவர்கள், ஆசிரியர்களென சின்னக்காவின் அன்பும் வாஞ்சையும் நிறைந்த பழஞ்சோற்றுக் குழையலின் சுவையறியார் யார்?".

நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, குறிப்பாக செயற்கை அறிவு  (Artificial Intelligence)  தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சி மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி உறுதுணையாக ஒன்றிணைந்து கூடிக் கல்வி கற்கும், செயற்திறன்களை வளர்க்கும் சூழலை சீர்குலைக்குமா?  என்கின்ற விவாதங்களை மனிதர்களிடையே எழுப்பியுள்ள நிலையில், சின்னக்காவின் அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்க்கையை எங்களால் மறக்கமுடியுமா?

உலகெங்கும் பரந்து வாழும் சின்னக்காவின் உறவுகள் அனைவர் சார்பாகவும், நாங்கள் சின்னக்காவை அன்புடன் நினைவு கூருகின்றோம்.

அன்புடன்
சாதாரணன்