Monday, December 31, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள் - இன்று முதல் - எனது புதுவருடத் தீர்மானம்

புத்தாண்டு வாழ்த்துக்கள் - இன்று முதல் - எனது புதுவருடத் தீர்மானம் 


முதலில் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

[caption id="" align="aligncenter" width="480"] புத்தாண்டு வாழ்த்துக்கள் - இன்று முதல் - புதுவருடத் தீர்மானம் [/caption]

இன்று முதல் - எனது புதுவருடத் தீர்மானம்


இடைவெளி விட்டு ஆடிக்கொருக்கா, ஆவணிக்கொருக்கா என்று பதிவதை விட்டு, விட்டு இனி மும்முரமாக பதிவுகளை எழுதவேண்டும் என்பதுதான் எனது இந்தப் புதுவருடத் தீர்மானம். ஒரு பிடி, பிடிப்பம் என்று தீர்மானிச் சிருக்கிறன். நான் விட்டாலும் உங்கடை பின்னோட்டங்கள் விடவிடாது என்றும் நம்புறன்.

சிறுவயதில் வீரகேசரி, தினகரன், தினபதி, ஈழநாடு பத்திரிகைகளில் கடைசிப்பக்கம் அல்லது அதற்கு முதற்பக்கத்தில் சினிமா விளம்பரங்களை ஆவலோடு எதிர்பார்ப்பதில் ஆரம்பித்த பழக்கம், இன்று நான் எழுதுவதை மற்றவர்களும் பார்க்கவேண்டுமே என்று ஏங்க வைக்கின்றது வரை வளர்ந்திருக்கிறது.

அன்று தினமும் அங்கும் இங்குமென வாசிகசாலைகளுக்கிடையே சைக்கிள் உழக்கி அலைந்த காலம்போய், இன்று இருந்த இடத்திலேயே, வலைமனைகளுக்கும், வலைப்பூக்களுக்கும் நுழுந்தி, நுழுந்திப்போய் தரிப்பதுவும், சொடுக்குவதுமாய் கழிகின்றது. ஆனால் இந்த மினைக்கெட்ட தேடலில் உள்ள அதீதமான ஆர்வம் மட்டும் அன்றுமுதல் இன்றுவரை என்றுமே குறைவதாகத் தெரியவில்லை.

இதனிடையே வாழ்வும் சில புலங்கள் பெயர்ந்திருக்கின்றது. இந்த மாற்றங்களிடையே எனக்கேற்பட்ட இரசனைமிக்க அனுபவங்களைத்தான் உங்களுடன் சாதாரணனின் வலைப்பதிவுகளில் இன்று முதல், வலு மும்முரமாக பகிரப்போகின்றேன்.

சரி புதுவருசத்திற்கு வந்தநீங்கள் ஒரு தேத்தண்ணி குடிச்சுப்போட்டுப் போறியளே?

www.saatharanan.com-017a

 

நன்றி.

அன்புடன்
சாதாரணன்.

-நேரமிருக்கேக்கை பேந்தும் வாங்கோவன்-

கோமாளிகள் - முதல்நாள், முதல் ஷோ, முதற்படம்

கோமாளிகள் - முதல்நாள், முதல் ஷோ, முதற்படம்


மறைந்த அமரர் உபாலி எஸ்.செல்வசேகரனின் நினைவாக கோமாளிகள் திரைப்படத்திலிருந்து ஒரு வீடியோ பாடல் காட்சி இணைக்கப்பட்டுள்ளது.

எனக்கொரு நண்பன் இருக்கிறான். அவன் எதிலை தீவிரமாக இருக்கிறானோ அதிலை அதீத, அதிதீவிரமாக இயங்குவான். ஏதோ எனக்குத் தெரிந்த வார்த்தைகளால் விபரிக்க முடிஞ்சது இவ்வளவுதான். உண்மையிலை அவன்ரை இயல்பு இதிலும்விட தீவிரமானது. அவனைப்பற்றி ஒரு முழுச் சொற்சித்திரம் விரைவில் வரைய எண்ணியிருப்பதால் விபரணத்தை இத்தோடை நிப்பாட்டுவம். சரி இனி விசயத்துக்கு வருவம்.

[caption id="attachment_334" align="aligncenter" width="480"]கோமாளிகள் - முதல்நாள், முதல் ஷோ, முதற்படம் கோமாளிகள் - முதல்நாள், முதல் ஷோ, முதற்படம்[/caption]

அப்ப அவன் தீவிர சிவாஜி ரசிகனாயிருந்த நேரம். அதாவது அவன் அதீத, அதிதீவிர சிவாஜி இரசிகனாயிருந்த நேரம். ராணியிலை உத்தமன், ராஜாவிலை எங்கள் தங்க ராஜா, மனோஹராவிலை உனக்காக நான் என்று முதல்நாள், முதல் ஷோ பார்த்துவிட்டு வந்து என்னை பிடிச்சு வைச்சு இருத்தாத குறையாக கதை சொல்லுவான்.

எதிலையும் கொஞ்சம் நடுநிலமையாக இயங்குகின்ற நானும் ஒரு வீம்பாக முதல் நாள், முதல் ஷோ என்று பார்த்த முதற்படம்தான், யாழ்ப்பாணம் வின்ஸரில் வயிறு குலுங்கக் குலுங்க சிரிச்சு பார்த்த ஈழத்துத் திரைப்படம் கோமாளிகள். இதில் மரிக்கார் ராமதாஸ், அப்புக்குட்டி ராஜகோபால், உபாலி எஸ்.செல்வசேகரன், ஐயர் அப்துல் ஹமீட் ஆகியவர்கள் நடித்திருந்தார்கள்

கோமாளிகள் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் காட்சி


நன்றி: பாலன் ஆர்ட்ஸ், Arul K, YouTube

அன்புடன்
சாதாரணன்.

 

 

 

 

 

Sunday, December 30, 2012

அதிங், இதிங் உபாலி எஸ்.செல்வசேகரன் - கோமாளிகளின் கும்மாளம் - சில நினைவுகள்

அதிங், இதிங் உபாலி எஸ்.செல்வசேகரன் - கோமாளிகளின் கும்மாளம் - சில நினைவுகள்


அமரர் உபாலி எஸ்.செல்வசேகரனின் மறைவினை முன்னிறுத்திச் சில நினைவுகள்

அப்ப யாழ்ப்பாணத்திலை டிவி இல்லை,மினிபஸ் கூட வராத காலம். இதிலை போனா சங்கடம் என்ற இ.போ.ச வசுவிலைபோய் யாழ்ப்பாணம் டவுனிலை படம் பாக்குறத்துக்குள்ளை தவிலறுந்போயிடும். தினசரிப் பொழுதுபோக்கிற்கு, றேடியொவே கதியென்று இருந்த காலகட்டம். அதுவும் கர், புர் சத்தத்தோடைதான் ஒலிக்கும்.

[caption id="attachment_227" align="aligncenter" width="300"]அமரர் உபாலி எஸ்.செல்வசேகரன் அமரர் உபாலி எஸ்.செல்வசேகரன்[/caption]

அந்த நேரத்திலை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பின்னேரம் நாலு மணியிலையிருந்து நாலரை மணிவரை றேடியோவிலை கோமாளிகளின் கும்மாளம் என்ற இலங்கை மக்கள் வங்கியின் விளம்பர நிகழ்ச்சி மூலம் எங்களை குதூகலத்தில் ஆழ்த்தியவர்கள் தான் இந்தக்கோமாளிகள்.

நிகழ்ச்சி அத்தானே, அத்தானே என்று தொடங்கும் மக்கள் வங்கியின் விளம்பர டைட்டில் சோங்குடன் ஆரம்பிக்கும். பாட்டு அந்த நாட்களில் எங்களுக்கு மனப்பாடம்.

அதைத் தொடர்ந்து இலங்கை வானொலி அறிவிப்பாளர்களில் தனக்கென பிரத்தியேக குரலைக்கொண்டிருந்த கவிஞர் சில்லையூர் செல்வராஜனின்
"இதோ உங்களைக் குதூகலத்தில் ஆழ்த்த வருகிறார்கள் உங்கள் கோமாளிகள்" என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து வரும் கோமாளிகளான, மரிக்கார் ராமதாஸ், அப்புக்குட்டி ராஜகோபால், உபாலி எஸ்.செல்வசேகரன், ஐயர் அப்துல் ஹமீட் என்று இவை நாலுபேரும் சேர்ந்து அடிக்கிற கூத்திலை சிரிச்சு, சிரிச்சு வயிறு புண்ணாப்போயிடும்.

இணப்புக்கள்

தமிழ் விக்கிபீடியாவில் இவரைப் பற்றிய தகவல்கள்.

http://ta.wikipedia.org/s/19hh

அமரர் உபாலி எஸ்.செல்வசேகரனின் பேட்டியோடு கூடியுள்ள தகவல்கள்.

http://www.thinakaran.lk/vaaramanjari/2010/04/11/?fn=f1004117&p=1

மரணங்கள் என்றுமே கவலையைத்தருவன. அதிலும் எங்களை கவலைகளை மறந்து சிரிக்க வைத்தவர்களின் மரணங்கள் கூடிய சோகத்தையே தரும்.

அமரர் உபாலி எஸ்.செல்வசேகரனின் ஆத்மா சாந்தியடையட்டும்.

அன்புடன்
சாதாரணன்.

Saturday, December 29, 2012

தகவற்சித்திரங்கள் Infographics

தகவற்சித்திரங்கள் Infographics


Infographics என ஆங்கிலத்தில் கூறப்படும் தகவற்சித்திரங்கள் இணையமெங்கும் பரவிக் கிடக்கின்றன. நீங்களும் பலவற்றை பார்த்திருப்பீர்கள். நான் கண்ட சுவாரசியமான தகவற்சித்திரங்களை அவ்வப்போது உங்களுடன் இப்பக்கத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கின்றேன்.

தகவற்சித்திரம் - சிறுவிளக்கம்


பக்கம், பக்கமாக எழுதி ஒரு கட்டுரையில் சொல்லவேண்டிய தகவல்களை எளிதாக ஒரு தகவற்சித்திரத்தில் வடிவமைத்துவிடலாம். இன்னும் சொல்லப்போனால் குறும்தகவல்கள், வரைபடங்கள், சித்திரங்களென செறிவுமிக்க தகவல்களை உள்ளடக்கிய ஒரு தகவற்சித்திரத்தை சிறப்பாக வடிவமைப்பதன் மூலம் சொல்லவேண்டிய விடயத்தை இலகுவாகவும், எளிதாகவும் வாசகர்களுக்கு புரிய வைத்துவிடலாம்.
இனி இன்றைய  தகவற்சித்திரத்தைப் பார்ப்போம்.

தகவற்சித்திரங்களை பற்றி விளக்கம் தரும் தகவற்சித்திரத்தை இன்று பார்ப்போம்.

தகவற்சித்திரங்களின் சரித்திரத்தைக் கூறும் தகவற்சித்திரம்.




[caption id="attachment_101" align="aligncenter" width="580"]தகவற்சித்திரங்கள் Infographics தகவற்சித்திரங்கள் Infographics[/caption]

Source : www.abccopywriting.com

Summary : Infographics is graphic visual representations of information, data or knowledge.

Friday, December 28, 2012

வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்.

வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்


நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளக தாவரங்களை வளர்ப்பவரா? உங்களுக்கு ஓர் நற்செய்தி!  உள்ளக தாவரங்கள் வீட்டினுள்ளேயுள்ள காற்றை சுத்திகரித்து சுகாதாரத்தையளிப்பதாக நாஸா நிறுவனத்தினர் நடத்திய ஆய்வொன்றின் முடிவு தெரிவித்துள்ளது.

[caption id="attachment_219" align="aligncenter" width="450"]வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள் வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்[/caption]

144 சதுர அடி கொண்ட அறையில் வைக்கப்படும் ஒரு தாவரமானது அந்த அறையிலுள்ள 90% வீதமான காற்றைச் சுத்திகரிக்கின்றது எனவும், இதனால் வீட்டிலுள்ளோரின் சுவாசம் சம்பந்தப்பட்ட சிக்கல்களும், மற்றும் தலையிடி போன்ற நோய்கள் வரும் சந்தர்ப்பங்கள் குறைவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பின்வரும் இணைப்புக்களில் எந்த வகையான தாவரங்கள் சிறந்தன என்ற விபரங்கள் உள்ளன.

http://scienceray.com/biology/ecology/keep-the-air-clean-in-your-home/

http://www.utne.com/Environment/NASA-sanctioned-houseplants-purify-indoor-air.aspx

Tuesday, December 25, 2012

புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!

எல்லோருக்கும் புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!!!


 

Australian Christmas Greetings




அன்புடன் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த புனித நத்தார் தின வாழ்த்துக்கள்.

 

ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ்


ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலமாதலால், என்னதான் ஐரோப்பிய, ஆங்கில மரபுகளை உள்ளடக்கிய சில நடைமுறைகளான ட்டர்கி சிக்கன் (Turkey), பவ்லோவா டெசெர்ட் (Pavlova desert) உணவு வகைகளை கொண்டமைந்தாலும் , ஆஸ்திரேலியாவிற்கே உரித்தான பின்வளவு பார்பக்கியூ (Backyard BBQ), பீச் சேர்விங் (Beech Surfing) ஆகியவற்றோடு இணைந்து கிறிஸ்மஸ்ஸை கொண்டாடுவது ஆஸ்திரேலிய மரபாகி விட்டது. பாடசாலைகளுக்கு நீண்ட கால கோடை விடுமுறை என்பதால் பிள்ளைகளின் சந்தோஷத்திற்க்கும் குறைவில்லை. மீதியை இந்த படங்கள் சொல்லும்.

[caption id="attachment_206" align="aligncenter" width="512"]Saatharan Blog - Australian Christmas ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ்[/caption]

[caption id="attachment_214" align="aligncenter" width="512"]Saatharan Blog - Australian Christmas ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ்[/caption]

மீண்டும் எனது உளம் கனிந்த புனித நத்தார் தின வாழ்த்துக்கள்.



அன்புடன் 
சாதாரணன்

Wednesday, December 12, 2012

ரஜினி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டி

ரஜினி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டி


இன்று ரஜினியின் அறுபத்து மூன்றாவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடுகின்றார்கள். இது 12-12-12 என்ற சிறப்பான நாளில் அமைவதும் எல்லோராலும் பெரிதாக பேசப்படுகின்றது. இதனை முன்னிட்டு ரஜினி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியினையும், ரசிகர்களுக்கு அளித்த செய்தியினையும் இப்பதிவில் காணலாம்.

[caption id="attachment_159" align="aligncenter" width="160"]Rajini Tv Interview Rajini[/caption]

 

ரஜினி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டி


Tuesday, December 11, 2012

எனக்கு பிடிச்ச ரஜினி

எனக்கு பிடிச்ச ரஜினி


சமீபத்தில் ரஜினியின் அறுபத்து மூன்றாவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடினார்கள். இது 12-12-12 என்ற சிறப்பான நாளில் அமைந்ததும் எல்லோராலும் பெரிதாக பேசப்படுகின்றது.

[caption id="attachment_308" align="aligncenter" width="300"]எனக்கு பிடிச்ச ரஜினி எனக்கு பிடிச்ச ரஜினி[/caption]

 

இதனை முன்னிட்டு ரஜினியின் ரசிகர்களான பல பிரபலங்களின் பேட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன. அவைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

எனக்கு பிடிச்ச ரஜினி - லாரன்ஸ் (டான்ஸ் மாஸ்டர்)



எனக்கு பிடிச்ச ரஜினி - சுரேஸ்கிர்ஸ்ணா (திரைப்பட இயக்குனர்)

Sunday, December 9, 2012

ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்:

ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்:


 

எனக்கு email இல் வந்தவொரு நல்லதொரு ஜோக். அனுப்பிய கல்லூரி நண்பன் R.விஜயராமச்சந்திரனுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். உங்கள் பாராட்டுகளும் அவனுக்குத்தான்.

[caption id="attachment_138" align="aligncenter" width="320"]ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக் ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்[/caption]

 

ஜோக்:

கடும் கோபத்தில் அந்த முதலாளி தனது ஊழியகர்ளிடம் கத்தினார்.

'நான்தான் இங்கு முதலாளி. நீங்கள் ஒன்றுமே இல்லை.

வெறும் பூஜ்யம். புரிகிறதா! இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார்?’

ஊழியர்கள் அமைதியாகப் பதில் அளித்தார்கள்: '... பூஜ்யம்!’

'அப்படியானால் நான் யார்?’  இது முதலாளியின் அடுத்த கேள்வி.

ஊழியர்கள் மீண்டும் அமைதியாக: 'பூஜ்யத்தின் முதலாளி’!

நீதி உங்களுக்குக் கீழ் இருப்பவர்களை மதிப்பானவர்களாக நியமித்து, மதிப்பானவர்கள் மதிப்பவராக உங்களை நீங்கள் தகுதிப் படுத்திக்கொள்ளுங்கள்!