Saturday, October 6, 2012

கல்லறையிலிருந்து கருவறைக்கு

கல்லறையிலிருந்து கருவறைக்கு


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உயிரினம் ஒன்று உயிருடன் உங்கள் முன்னால் உலா வரப்போகின்றது என்றால் நம்பமுடிகின்றதா? தற்போது ஜப்பானில் நடந்து வரும் ஆராய்ச்சி வெற்றியளிக்குமாயின் இன்னும் ஐந்து வருடங்களில் நிகழப்போகும் நிதர்சனம் இது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பனிக்கட்டிக் காலத்தில் ரஸ்யாவின் சைபீரிய வெளிகளில் வாழ்ந்த ஒருவகை யானையினம் பூமியில் ஏற்பட்ட திடீர் வெப்ப உயர்வால் முற்றிலுமாக அழிந்தது. இந்த உயிரினத்தைதான் மீண்டும் அதன் DNA மூலக்கூறுகளிலிருந்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஜப்பான் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

மமூத் எனப்படும் இந்த உயிரினத்தின் செல்களின் DNA மூலக்கூறுகளை யானையின் வெற்றுக் கருமுட்டையினுள் செலுத்திப் பின்னர் பரிசோதனைச்சாலையில் சிலநாட்களுக்கு கருவை வளர்த்தெடுத்து யானையின் கருப்பையினுள் வைப்பதன் மூலம் உருவாகும் குட்டி முழுமைபெற குறைந்தது 600 நாட்களாவது எடுக்கும்.

இணைப்புக்கள்.
http://theweek.com/article/index/211207/cloning-the-woolly-mammoth-a-worrying-precedent

பழைய செய்தியெனினும் விரிவாக ஆராய்ந்துள்ளது.
http://news.nationalgeographic.com/news/2005/04/0408_050408_woollymammoth.html

No comments:

Post a Comment